search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளை அறிக்கை"

    • உளவுத்துறையினர் ஒட்டு கேட்டு ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
    • உளவு அமைப்பை போதை பொருட்கள் நடமாட்டம், ரவுடிகளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல் அடியாட்கள் போல பயன்படுத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க மாநில வக்கீல் பிரிவு செயலாளர் இன்ப துரை நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக உளவுத்துறையினர் அ.தி.மு.க தலைவர்கள் முதல் வட்ட செயலாளர்கள் வரை செல்போனில் பேசுவதை ஒட்டு கேட்கும் விவகாரம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்காக ரூ. 40 கோடி மதிப்பில் உளவு சாதனம் ஒன்றை இறக்குமதி செய்து நாங்கள் பேசுவதை கண்காணித்து ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக நான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து 5 நாட்கள் ஆகிவிட்டது. தேர்தல் ஆணையமோ, உள்துறை செயலாளரோ, தமிழக முதலமைச்சரோ யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    எனது புகார் மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் தேர்தல் சமயத்தில் எங்களது வெற்றிக்கு பல்வேறு வியூகங்கள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் உரையாடல் நடத்துவோம். அதனை உளவுத்துறையினர் ஒட்டு கேட்டு ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.

    உளவு அமைப்பை போதை பொருட்கள் நடமாட்டம், ரவுடிகளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல் அடியாட்கள் போல பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரியிடம் செல்போனில் இன்று காலை தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று மாலைக்குள் தமிழக தேர்தல் ஆணையம் பதில் தெரிவிப்பதாக கூறியுள்ளார்கள்.

    இன்று மாலைக்குள் பதில் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் நேற்று நெல்லையில் இருந்து நாங்குநேரி வழியாக ராதாபுரம் தொகுதிக்கு ஒரு கோடி ரூபாய் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராதாபுரத்தை சேர்ந்த ஒரு முக்கிய நிர்வாகிக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதனை பறக்கும் படையினர் சோதனை செய்யவில்லை.

    அதே நேரத்தில் நாங்குநேரி போலீசில் பிடிபட்ட அந்த பணத்தின் மதிப்பு ரூ. 28 லட்சம் வரை மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது.

    இது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த பணம் யாருடையது? எதற்காக கொண்டு செல்லப்பட்டது? என்பது குறித்து விரிவான விசாரணை தேவை. அந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் முறையான விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை தெரிவிக்க வேண்டும்.

    அ.தி.மு.க.வினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் கெடு விதிக்கிறேன். நான் கொடுத்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை செயலாளரும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எழுதியவர்கள் கூட அது நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டது என்று ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
    • கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்த பாவங்கள் மற்றும் தவறுகளை பூசி மெழுகுவதையே இந்த அறிக்கை நோக்கமாக கொண்டுள்ளது.

    புதுடெல்லி:

    மோடி அரசு செய்த பாவங்களை பூசி மெழுக வெள்ளை பொய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

    மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தது குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு வெளியிட்டு இருப்பது வெள்ளை அறிக்கை அல்ல. வெள்ளை-பொய் அறிக்கை. அதை எழுதியவர்கள் கூட அது நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டது என்று ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

    முந்தைய அரசை குற்றம்சாட்டவும், தற்போதைய அரசின் வாக்குறுதி மீறல்கள், மாபெரும் தோல்விகள், ஏழைகளுக்கு செய்த துரோகம் ஆகியவற்றை மறைக்கவும் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைதான் இந்த அறிக்கை.

    கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்த பாவங்கள் மற்றும் தவறுகளை பூசி மெழுகுவதையே இந்த அறிக்கை நோக்கமாக கொண்டுள்ளது. நியாயமான, பாரபட்சமற்ற ஆராய்ச்சியாக இருந்தால், 2004-ம் ஆண்டு தொடங்கி, 2014-ம் ஆண்டுடன் முடித்திருக்கக்கூடாது.

    இதற்கு சரியான பதில், காங்கிரஸ் வெளியிட்ட '10 ஆண்டு அநீதி காலம்' அறிக்கை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வெள்ளை அறிக்கையில், வேலையின்மை, பணமதிப்பிழப்பு, பணவீக்கம் ஆகியவை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    சீனாவுடனான எல்லை பிரச்சினை, எல்லையில் நிலவும் பதற்றம் ஆகியவற்றை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும். நாங்கள் கேட்கும்போதெல்லாம் மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது.

    பொதுத்துறை நிறுவனங்கள், மோடியின் 2 நண்பர்களுக்கு விற்கப்படுகின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, கருப்பு பண மீட்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சி, மோடி ஆட்சி கால பொருளாதரம் குறித்து வெள்ளை அறிக்கை.
    • உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உங்களால் கையாள முடியவில்லை- என நிர்மலா சீதாராமன் விமர்சனம்.

    பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றார். அதற்கு முன்னதாக இந்தியாவின் பொருளாதார நிலை, பிரதமர் மோடி பதவி ஏற்றபின் இந்தியாவின் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

    அதன்படி நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இன்று அவர் மக்களவைவில் வெள்கை அறிக்கை தொடர்பாக பேசினார். அப்போது நீங்கள் (UPA- காங்கிரஸ் ஆட்சி காலத்தில்) நிலக்கரியை சாம்பலாக்கி விட்டீர்கள். நாங்கள் நிலக்கரியை வைரமாக்கியுள்ளோம். நிலக்கரி ஊழல் தொடர்பான சிஏஜி அறிக்கையில், இந்தியாவுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உங்களால் கையாள முடியவில்லை. அதை எப்படி கையாள வேண்டும் என்று இப்போது பாடம் எடுக்கிறார்கள். 2008 பொருளாதார நெருக்கடி கொரோனா நெருக்கடி காலம் போன்றது போல் தீவிரமாக இல்லை. காங்கிரஸ் அரசாங்கம் நேர்மையாக கையாண்டிருக்க வேண்டும். நாட்டின் நலனை பாதுகாக்க ஒன்றும் செய்யவில்லை. ஆனால் ஊழல் மேல் ஊழல் தொடர்ந்தது. இப்படி பட்ட சூழ்நிலையில்தான் ஆட்சியில் இருந்து வெளியேறினார்கள்" என்றார்.

    • பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது.
    • நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் வெள்ளை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது.

    டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மிகவும் மோசமாக இருந்தது.

    வாராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் பலவீனமாக இருந்தன.

    காமன்வெல்த் போட்டியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்க உள்கட்டமைப்பில் காங்கிரஸ் அரசு முதலீடு செய்யவில்லை.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவிலேயே இருந்தன.

    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் விட்டுச்சென்ற சவால்களை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றிகரமாக சமாளித்தது.

    இந்தியாவை நிலையான வளர்ச்சிப் பாதையில் வைக்க கடினமான முடிவுகளை எடுத்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அப்போது காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.

    • சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோதே, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைத்திருக்கலாமே.
    • ஸ்பெயின் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது ஏன் என்பதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசு முறைப்பயணமாக 27.1.2024 அன்று ஸ்பெயினுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், ஸ்பெயின் நாட்டின் முன்னணித் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசியதாகவும், இதையடுத்து பல தொழில் நிறுவனங்கள் தமிழ் நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளதாகவும், பல நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு நேற்று பேட்டி அளித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் பயணத்தினால் தமிழகத்திற்கு மூன்று நிறுவனங்கள் மூலம் 3,440 கோடி ரூபாய் முதலீட்டிற்கான உடன்பாடுகள் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவித்து உள்ளார். மேலும், பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

    இருபது நாட்களுக்கு முன்பு, சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோதே, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைத்திருக்கலாமே. ஆனால் 20 நாட்கள்கூட முடியாத நிலையில், மீண்டும் முதலமைச்சர் ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் செய்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது முதலீட்டை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்து உள்ளது. இதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும்.

    மேலும், தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ள 3 நிறுவனங்களில், 2 நிறுவனங்களின் அலுவலகங்கள் சென்னை மற்றும் பெருந்துறையில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஸ்பெயின் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது ஏன் என்பதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும்.

    எனவே, தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் பொருளாதாரத்துடம் ஒப்பிடும் வகையில் வெள்ளை அறிக்கை.
    • பா.ஜனதா வெள்ளை அறிக்கை கொண்டு வரும் நிலையில், போட்டியாக கருப்பு அறிக்கை கொண்டு வர முடிவு.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அப்போது காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். அதன்மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்படும்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கருப்பு அறிக்கை கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுளு்ளது. மோடியின் 10 ஆண்டு அரசு தொடர்பாக கருப்பு அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொண்டு வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால் சனிக்கிழமை (பிப்ரவரி 10-ந்தேதி) பாராளுமன்ற இரு அவைகளிலும் காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்தது.
    • பிரதமர் மோடி ஆட்சி அமைந்ததும் பொருளாதார நிலை எப்படி மாற்றத்தை சந்தித்தது குறித்து வெள்ளை அறிக்கை.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அடுத்த நாள் பிப்ரவரி 1-ந்தேதி மந்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அதனைத் தொடர்ந்து கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக மக்களவையில் பேசினார். இன்று மாநிலங்களவையில் பேசுகிறார். நாளைமறுநாள் (பிப்ரவரி 9-ந்தேதி) வெள்ளிக்கிழமையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய இருந்தது.

    இந்த நிலையில் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, 2014-க்கு முன் இந்திய பொருளாதாரம், மோடி தலைமையிலான பா.ஜனதா அமைந்த பின் 2014-க்குப்பின் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான ஒப்பீடு குறித்து வெள்ளை அறிக்கை மக்களைவில் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.

    இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 9-ந்தேதி முடிவடையும் நிலையில், மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு 10-ந்தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த நாட்டின் மோசமான பொருளாதார நிலை, பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசு எப்படி திருப்பத்தை கொண்டு வந்தது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்.

    பொதுவாக பாராளுமன்றத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவல் பணிகள் செயல்படாது. இருந்த போதிலும் சனிக்கிழமைகளில் நடைபெற்ற நிகழ்வுகள் உள்ளன.

    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கு அறிவுறுத்த கவர்னருக்கு அதிகாரம் உண்டு.
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு காவல் துறையை மட்டுமல்ல அரசு வழக்கறிஞர்களையும் தவறாக வழி நடத்தியுள்ளனர்.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியினர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர். பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், தமிழக சட்டமன்ற பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி, மாநில செயலாளர் பிரமிளா சம்பத் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் கவர்னரிடம் மனு அளித்தனர்.

    கவர்னரை சந்தித்த பிறகு அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளச்சாராய உயிரிழப்பு உள்ளிட்டவை குறித்து கவர்னரிடம் 2 மனுக்களை அளித்துள்ளோம். கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளோம்.

    தமிழகத்தில் டாஸ்மாக்கின் ஆதிக்கம் எப்படி இருக்கிறது என்பதை கவர்னரிடம் எடுத்து கூறி உள்ளோம். அதே நேரத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இன்னும் 15 நாட்களுக்குள் டாஸ்மாக்கை குறைத்து அதே வருமானத்தை கொண்டு வர முடியும் என்கிற வெள்ளை அறிக்கையையும் முதலமைச்சரிடம் கொடுப்பதாக நாங்கள் கவர்னரிடம் கூறியுள்ளோம்.

    காவல் துறைக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று மகளிர் அணியுடன் வந்து கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம்.

    இதற்கான அதிகாரம் கவர்னருக்கு இருக்கிறது என்று நம்புகிறோம். அரசியலமைப்பு சட்டத்தை அமைச்சர் மீறும்போது அதை காக்கும் பொறுப்பு கவர்னருக்கு உண்டு.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கு அறிவுறுத்த கவர்னருக்கு அதிகாரம் உண்டு.

    தமிழகத்தில் காவல் துறைக்கு சுதந்திரம் இல்லை. தி.மு.க. ஒன்றிய செயலாளர் அனுமதி இல்லாமல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க முடியுமா? கடந்த 2 வருடங்களாகவே நாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு காவல் துறைக்கு சுதந்திரம் இல்லை என்பது தான். காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு காவல் துறையை மட்டுமல்ல அரசு வழக்கறிஞர்களையும் தவறாக வழி நடத்தியுள்ளனர்.

    இதே போல் அமைச்சர் செஞ்சி மஸ்தானையும் நீக்க கவர்னர் முதலமைச்சருக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.

    பனை தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மீண்டும் கள்ளை கொண்டு வருவதற்கு தமிழக பா.ஜனதா கட்சி உறுதுணையாக நிற்கும். 15 நாளில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம். அடுத்த 5 நாளில் விழுப்புரத்தில் மாநாடு நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • பயங்கரவாதமும், கள்ள நோட்டுகளும் அதிகரித்துள்ளன.

    புதுடெல்லி :

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 6-ம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பணமதிப்பிழப்பு மூலமாக சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய, திட்டமிட்ட கொள்ளை இதே நாளில் அரங்கேற்றப்பட்டது. 6 ஆண்டுகள் ஆன நிலையில், பணமதிப்பிழப்பின் தாக்கம் குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    ஏனென்றால், நாம் என்ன சாதித்தோம், என்ன இழந்தோம் என்று தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.

    கருப்பு பணம் வெளிவரும் என்று சொன்னீர்கள். ஆனால், வறுமைதான் வந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. பயங்கரவாதமும், கள்ள நோட்டுகளும் அதிகரித்துள்ளன.

    மொத்தத்தில், இது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த காவிய தோல்வி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×